தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. இன்றைய வானிலை தகவல்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன. 09) லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 450 க்கும் மேற்பட்ட காலியிடம் – உடனடி நியமனம்!
அதனை தொடர்ந்து ஜன.10ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும். தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியாசாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜன. 9, 10ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.