வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கவுள்ள கனமழை!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் டிச.11ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. அதனால் தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிச.08) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
டிச.9ம் தேதியன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, கரூர், திருவள்ளூர், இராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அதிர்ச்சியில் மக்கள்.. அமைச்சர் விளக்கம்!
அதனை தொடர்ந்து டிச.10ம் தேதி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Exams Daily Mobile App Download
டிச.11ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், , மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.