தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை அறிக்கை தகவல்கள்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த பருவமழையின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு உருவான மாண்டாஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்தது. ஒரு வழியாக இந்த வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரியில் முடிவுக்கு வந்தது.
குடிமைப்பணி தேர்வுகளுக்கான வயது வரம்பு தளர்வு – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!!!
Follow our Instagram for more Latest Updates
அதன் பிறகு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் நிலவியது. இந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னர் வளைகுடா பகுதியில் வலுவிழந்தது.
இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8,9,10,11 ஆகிய தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download