தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே கடந்த 3ம் தேதி அதிகாலை கரையை கடந்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (பிப். 06) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக அரசின் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடவாரியான பொதுத்தேர்வு அட்டவணை!
மேலும் பிப்ரவரி 7, 8, 9, 10 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் அதிகபட்ச வெப்பநிலை 21 – 22 செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.