தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
பள்ளி மாணவர்களை தாக்கும் கொடிய வைரஸ் – 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! கேரளா அரசு அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இதன் காரணமாக இன்று (பிப். 04) தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஓரிடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப். 5,6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் வெப்பநிலை அதிகபட்சமாக 31 – 32 செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். மேலும் இன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.