வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! இன்றைய வானிலை தகவல்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (பிப்.01) கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதனால் இன்று புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சாமானிய மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – நிர்மலா சீதாராமனின் சூப்பரான அறிவிப்பு!!
அதனை தொடர்ந்து நாளை ( பிப்.02) புதுவை மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல பிப். 4 மற்றும் 5ம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.