தமிழகத்தின் 4 மாவட்டங்களில் நாளை வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வெதர்மேன் அறிக்கை!
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கனமழை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடையில் சற்று ஓய்ந்த மழை தற்போது தெற்கு வங்ககடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களும் நிரம்பி மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசின் புதிய வியூகம்!
மேலும் டெல்டா மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையால் பல ஏக்கர் கணக்கிலான பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதனை தொடர்ந்து தலைநகர் சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் சென்னையில் போர்க்கால அடிப்படையில் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் நவம்பர் 29ம் தேதியுடன் படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் பல தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிந்த நிலையில் அதன் படி இன்று சென்னையில் மழை குறைந்து மிதமான வெளியில் நிலவியது. வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டும் வரும் இந்த நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 1ம் தேதி மழை குறையும். அடுத்ததாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.