விழுப்புரத்தில் நவ.11 வேலைவாய்ப்பு முகாம் 2022 – 100 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய தொழில் சேவை மூலம் 11/11/2022 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு முகாம் :
விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் 11 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தேசிய தொழில் சேவை மூலம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 5க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் விவரங்களை முன்னதாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் 04.11.2022 மாலை 4:00 மணி முதல் 09.11.2022 மதியம் 12:00 மணி வரை தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
- வேலைவாய்ப்பு முகாம் தொடங்கும் தேதி/நேரம் : 11 நவம்பர் 2022, 11:00 AM
- வேலைவாய்ப்பு முகாம் முடிவு தேதி/நேரம் : 11 நவம்பர் 2022 ,1:00 PM
- நடைபெறும் இடம்: MCC, DECGC, விழுப்புரம் (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்
- பதிவு தேதி/நேரம்: : 4 நவம்பர் 2022 மாலை 4:00 மணி முதல் 9 நவம்பர் 2022 மதியம் 12:00 மணி வரை
- கூடுதல் விவரங்களுக்கு தேசிய தொழில் சேவையின் அதிகாரப்பூர்வ இணையத்தள www.ncs.gov.in பக்கத்தை நாடவும்.