TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நாளை (பிப்.12) முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தேர்வர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
PG TRB தேர்வு:
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ளது 2,207முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததால் தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி வரும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
IND vs WI 3rd ODI: வெஸ்ட் இண்டிஸை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வரை காலை மாலை என இரு வேலைகளிலும் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்த நேரத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அன்றைய தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வாணையம் தேர்வர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை தேர்வெழுதவுள்ள தேர்வர்கள் காலை 7.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரலில் பொதுத்தேர்வு!
பிற்பகல் தேர்வு எழுத உள்ளவர்கள் 12.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். வரும் போது ஹால் டிக்கெட் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். தேர்வர்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக் கூடாது. தொலைபேசி , கணிப்பான் , லாக் டேப்பில்ஸ், புத்தகம் போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.