TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!

0
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான (டிஆர்பி) தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் குளறுபடி நடந்து இருப்பதாக தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்வில் மீண்டும் முறைகேடு:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த வகையில் எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் தற்போது வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் அதிகம் வெளியாகி வருகிறது. இந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு முறைகேடுகள் நடந்ததாக கூறி பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான (டிஆர்பி) தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

IND VS SA: ரோஹித்துக்கு பதில் ஓப்பனிங்கில் களம் இறங்குவேன் – KL ராகுல் உறுதி!

இதனை தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் டிசம்பர் 10ம் தேதி நடைபெற்ற வேதியியல் பாட தேர்விலும் மற்றும் 12ம் தேதி நடைபெற்ற இ.சி.இ பாட தேர்விலும் ஒரே மாதிரியான 10 பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அந்த 10 வினாக்களும் வரிசை மாறாமல் அப்படியே இரண்டு தேர்வு வினாத்தாளில் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்த குற்றம் தற்போது வெளியிடப்பட்ட விடைக்குறிப்பு மூலம் கண்டறியப்பட்டதாக தேர்வர்கள் கூறியுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது. இந்த குளறுபடிகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து முறையாக விசாரித்து , நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விரிவுரையாளர் தேர்வு தனித்தனி பாடப்பிரிவில் 190 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அந்த வகையில் ஒரு மதிப்பெண் கூடுதலாகவோ அல்லது குறைவாக இருந்தாலும் பணியிட நியமனங்களில் மாற்றம் ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!