TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு – தொலைதூர மைய ஒதுக்கீட்டால் தேர்வர்கள் அதிருப்தி!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கான தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊழியர்கள் அதிர்ச்சி!
இந்த நுழைவு சீட்டை நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். இந்த நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்கும் அத்துடன் பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வர்களுக்கு தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் பெண் தேர்வர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தேர்வு மையத்திற்கு காலை 7.30 மணிக்கு வருகை தர வேண்டும் என்று தெரிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்வர் லதா கூறியதாவது, கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அவருக்கு சேலத்தில் மையம் ஒதுக்கபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நாமக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த ஊரில் ஏராளமான தேர்வு மையங்கள் இருக்கும் போது மற்ற மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கபடுவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேர்வர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து புதிய நுழைவுச்சீட்டை வெளியிடவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.