TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 16,17 ஆகிய இரு தினங்களில் நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
TN TRB ஆசிரியர் வேலைவாய்ப்பு :
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ளது 2,207முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 12ம் தேதி தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி தேர்வு நடைபெறும்.
பட்டதாரிகளுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அருமையான ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
மேற்கண்ட தேதிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடைபெற இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, புல்லூர், சேது பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 16,17 ஆகிய இரு தினங்கள் நடைபெற இருந்த இருந்த கணினி வழி தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக வேறு மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி? வைரலாகும் ப்ரோமோ!
அதனால் காரியாபட்டி, புல்லூர், சேது பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு மாற்று தேர்வு மையம் குறித்த விவரம் தேர்வர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். மேலும் Voice Message அனுப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாற்றப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு அதற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.