TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை!
ஆசிரியர் தேர்வு வாரியமானது முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகளை நடத்துவதற்கு பிப்ரவரி 12ம் தேதி திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கோரிக்கை:
கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிக் கனவோடு காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதி வாரியாக தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்து வந்ததால் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.
Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு – பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!
தற்போது அந்த நாட்களில் ஆசிரியர் முதுகலைக்கல்வியியல் தேர்வுகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு முன்னதாகவே முதுகலை ஆசிரியர் கல்வியியல் தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிடப்பட்டதால் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வை வேறு தேதிகளில் தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.