TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்க கூடிய சூழலில் போட்டித்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான TRB தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கான விண்ணப்ப பதிவுகளும் கடந்த 18ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு வயது வரம்பு அதிகரிப்பு – 5 லட்சம் பட்டதாரிகள் பாதிப்பு!
இப்போது 2020-21ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்யப்பட இருக்கிறது. இப்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு – சத்துணவு வழங்க ஏற்பாடு!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கு தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு 45 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ள நிலையில் இதை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய இருப்பதாலும், விண்ணப்ப பதிவுகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்ததாலும் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.