TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து? அரசு பதிலளிக்க உத்தரவு!
தற்போது TNPSC நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அறிவிப்பாணை ரத்து
தமிழகத்தில் கடந்த 2017-18ம் ஆண்டில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக தற்போது தேர்வுகள் நடத்தப்பட இருக்கும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை அரசு ரத்து செய்ய வேண்டும் என சிவராமன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு!
அதாவது, தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசுப் பணிகளில் தமிழ் மக்களுக்கு மட்டும் 1100% முன்னுரிமை அளிக்கும் பொருட்டு TNPSC நடத்தும் அனைத்து தேர்விலும் தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி இருக்கிறது. இதனால் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான மறுதேர்விலும் இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘தமிழகத்தில் கடந்த 2017-18ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் 1,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019ம் ஆண்டு புதிய அறிவிப்பானை வெளியிட்டது.
அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்வு நாளை (டிச.8) துவங்க இருக்கிறது. இதுவரை தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வுக்கு தமிழ் மொழியை முதன்மை பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அப்படி தமிழ் மொழியை படிக்காதவர்கள் பணி கிடைத்த 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என விதிகள் இருக்கிறது. இப்போது தமிழ் தெரியாத மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் இத்தேர்வுக்கு அதிகளவில் விண்ணப்பித்திருப்பதால், தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களின் 100% பணி நியமனம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
அதனால் புதிய அரசாணையை முன்னிறுத்தி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.