TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ‘அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும்’ என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 1000+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
விரிவுரையாளர் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் அதிக மழை பெறும் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வருகிற டிசம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. அறிவித்திருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இந்நிலையில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்து அநேக இடங்களில் வெள்ளப்பெருக்காக உள்ளது இதனால் இந்த தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக டி.ஆர்.பி தலைவர் லதா அவர்கள் கூறியதாவது, ” திட்டமிட்டபடி வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் முன்னுரிமை அடிப்படையில் தான் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றும் கூறியுள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 48 நாட்கள் விடுமுறை!
மேலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் ஆகியோர் தங்களின் தேர்வு மையங்களை மாற்ற நினைக்கும் வகையில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (டிச.4) நாளைக்குள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் டி.ஆர்.பி இணையதளத்தை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். எனவே இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் எந்தவித சந்தேகமின்றி தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.