TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி வெளியீடு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களுகான 28 ம் தேதி தொடங்க உள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு குறித்த அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு :
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது ஓரளவு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரம்ப கோரிக்கை எழுந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் விநியோகம்!
இதனையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆசிரியர் தேர்வுக்கு முதன்முதலாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TRB) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது – பட்டியல் வெளியீடு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு கணினி ன் வாயிலாக போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது இந்த தேர்வு வருகிற 28-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த 4 நாட்களில் 8 பிரிவுகளாக பிரித்து தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் இணையதளத்தில் சென்று முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான அனுமதி அனுமதி சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.