TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – விரைவில் முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
TN TRB:
தமிழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டபோது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து முதல் கட்டமாக மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் – ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு!
மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் அதனை தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வரை காலை மாலை என இரு வேலைகளிலும் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதன்படி கணினி பயிற்றுநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்வினை தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சம் பேர் எழுதியுள்ளார்கள்.
மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!
இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இத்தேர்வுக்கான கீ ஆன்சர் ஒரு வாரத்துக்குள் வெளியாகும் என்றும் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.