TN TET ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – TRB முக்கிய அறிவிப்பு!
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் அரசு நியமிக்கிறது. ஆசிரியர்களுக்கான தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்களை TRB வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அரசு ஆசிரியர் பணிக்கு முன்னதாக வயது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த வயது வரம்பானது நீக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் சமீபத்தில் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அரசின் குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டிற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களும் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் மற்றும் 2ம் தாள் தேர்விற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு, மார்ச் 14 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 6.3 லட்சம் ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி ஒருவர் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மாத இறுதியில் நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.