TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!

0
TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!
TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!
TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் 2018 , 2019ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பணி நியமனம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளில் முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

டிச.26 முதல் இரவு ஊரடங்கு அமல், புத்தாண்டு கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்புமாறு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் சங்கத்தினர் 2018 , 2019 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் விளக்கம்! பொதுமக்கள் அச்சம்!

2019 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 1:2 என்ற விகிதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர். அவர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது. பிற தேர்வர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.இது குறித்து கேட்டபோது தேர்வர்களின் இரண்டாம் பட்டியலை தேர்வு வாரியம் தாமதமாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2019ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!