தமிழகத்தில் இரவு 10 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கம் – SETC அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இரவு 10 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கம் - SETC அறிவிப்பு!!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கம் - SETC அறிவிப்பு!!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கம் – SETC அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி போக்குவரத்து செயல்பாடுகளில் உள்ள சில மாற்றங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்துகள் செயல்பாடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பொதுமக்கள் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை சரியான விதத்தில் கையாலாத போது இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கையும், வார இறுதியில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இதன்படி போக்குவரத்து சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் செயல்படாது.

தமிழக வட்டார கல்வி அலுவலர் (BEO) இறுதி பட்டியல் – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!!

பகல் நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலை பரிசோதனை, கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும் சென்னையிலிருந்து குறுகிய மற்றும் நெடுந்தூரங்களுக்கும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும். ஞாயிற்று கிழமைகளில் பேருந்துகள் இயக்கப்படாது.  விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், பயணத்தேதியை மாற்றிக் கொள்ள ஏதுவாக அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகலாம்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா – 1,619 பேர் பலி!!

அரசு பேருந்துகளில் இரவு நேரம் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயணம் செய்ய முன் பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திரும்ப செலுத்தப்படும். அதே போல இரவு நேர பயணத்துக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பயணம் மாற்றி கொடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்தை பொறுத்தவரை மக்கள் நின்று கொண்டு பயணிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அரசு விதித்துள்ள உத்தரவின் படி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!