தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறப்பு – கொடைக்கானலில் குவியும் மக்கள்!
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கொடைக்கானலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமப்பட்டனர். அதனை தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு தொடர் தடை விதிக்கப்பட்டது. மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக செல்வதால் சமூக இடைவெளி இன்றி தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பிரதமர் மோடியை பார்க்க 815 கி மீ நடந்தே வந்த இளைஞர் – அடம்பிடிக்கும் ஆச்சரியம்!
இதனால் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் விற்பனை இன்றி வருமானம் இழந்தனர். மேலும் சுற்றுலா துறையும் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. அரசின் முயற்சியால் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது. இதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது கூடுதல் தளர்வுகளாக சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும், பூங்காக்களில் ஓய்வு எடுத்து குழந்தைகளை மகிழ்விக்கவும், பசுமை பள்ளத்தாக்கு, படகு இல்லங்கள் மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா தல வியாபாரிகள் மீண்டும் தங்கள் தொழில்களை தொடங்கியுள்ளனர்.