தமிழக திரையரங்குகளில் நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் ரத்து – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காட்சிகள் ரத்து
பொதுவாக, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் முதல் காட்சி அதிகாலையில் திரையிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை காண வந்த ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த நிகழ்வு தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
போக்குவரத்து நெரிசலில் திக்கி திணறும் சென்னை – வாகனங்கள் நகர்ந்து செல்லும் அவலம்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் திரையரங்குகளில் திரையிடப்படும் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளை ரத்து செய்வது குறித்து கோரிக்கை வைக்க இருப்பதாக உட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.