TN TET ஆசிரியர் தகுதித்தேர்வை ஜூலை இறுதியில் நடத்த முடிவு – தேர்வு வாரியம் அறிவிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியான நிலையில் தற்போது வரைக்கும் தேர்விற்கான தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது. இந்நிலையில் ஜூலை மாதத்தின் இறுதியில் தேர்வு நடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாகவே அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இதுவரைக்கும் 6.3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும் எந்த தேதியில் தேர்வு நடக்க இருக்கிறது என்பது குறித்தான அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. அதாவது முதல் தாளை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுதலாம் மற்றும் இரண்டாம் தாளை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க இருக்கும் ஆசிரியர்கள் எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
TVSM நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் 150 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்கிற விகிதத்தில்150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண் எதுவும் கிடையாது என்பதால் ஆசிரியர்கள் எந்தவித தயக்கமும் இன்றி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் காத்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஜூலை மாதத்தின் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு கொண்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.