TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
இரண்டு வருட ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) நடத்தப்படாமல் இருந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வு நடத்தவுள்ளதான தகவல் வெளியாகியது. ஆனால் தேர்வு தேதி பற்றிய விவரம் ஏதும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது அதை குறித்தான தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தகுதி தேர்வு (டெட்):
கொரோனா காலகட்டமான 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் நாட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு கல்வி உட்பட அனைத்தும் பாதித்தது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அதன் மூலம் புது ஆசிரியர் நியமனம் மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் அப்டேட் ஆவதும் பாதித்தது. இவ்வாறு திடீரென வந்த நோய் தொற்றால் இது போன்ற எவ்வித தேர்வும் நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது கொரானா தாக்கம் குறைந்து வரும் காரணத்தால் இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
நாளை மறுநாள் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
அதன்படி, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு வெளியாகிய தேர்வு அறிக்கையில் எப்போது தேர்வு நடைபெறும்? ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது ஆப்ளைனில் நடைபெறுமா? என இது போன்ற எந்தவிதமான தகவலும் அதில் குறிப்பிடவில்லை. இதனால் குழப்பத்தில் இருந்த தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மாத இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் எனவும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.