தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? உயர் கல்வித் துறை விளக்கம்!

0
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? உயர் கல்வித் துறை விளக்கம்!
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? உயர் கல்வித் துறை விளக்கம்!தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? உயர் கல்வித் துறை விளக்கம்!
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? உயர் கல்வித் துறை விளக்கம்!

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல் பரவியது. இது குறித்து தற்போது உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பணி நீக்கம்:

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் கடந்த 2006ம் ஆண்டு 4000 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களது பணி தற்போது நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறு உயர்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்றாக தகுதி வாய்ந்த பிற கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

Exams Daily Mobile App Download

தற்போது இது குறித்து உயர் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தற்போது பணிபுரிந்து வரும் கவுர விரிவுரையாளர்கள் பணி நீக்குவது அரசின் நோக்கம் இல்லை. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளனர். அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு நேர்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!