தமிழகத்தில் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்புறங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Post office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மேலும் ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மேலும் பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவுரைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் – PIB விளக்கம்!
தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு பிப்ரவரி 18ம் தேதி முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் 22ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது