தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மூடல் – டோக்கன் முறையில் மது விற்பனை!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் பார்கள் அனைத்தும் மூடப்படவுள்ளது. மேலும் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மூடல்:
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரவு நேர ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று (20-04-2021) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவகங்கள், திரையரங்குகள், மால்கள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டயாம் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் எனவும், ஞாயிற்று கிழமைகளில் கடைகள் அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மது கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டுமாக டோக்கன் முறை நடைமுறைக்கு வர உள்ளது.
இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை இயங்கும். மதுபான கடைகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மது கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.