தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் விரைவில் திறப்பு? தயாராகும் புதிய கட்டுப்பாட்டு விதிகள்!
தமிழகத்தில் கொரோனா முழு முடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், டாஸ்மாக் பார்களை திறப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் பார்கள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நிமித்தமாக கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த ஆண்டின் இறுதியில் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் டாஸ்மாக் பார்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் தொடர்ந்து 3 மாதங்களாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக மீண்டுமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் செப்.24 வரை ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அலை கட்டுக்குள் வந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் கடந்த ஜூலை மாதம் முதல் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து டாஸ்மாக் பார்களை மீண்டுமாக திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் மொத்தம் 3,281 உள்ளன.
தமிழகத்தில் B.E., B.Tech மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அட்டவணை – வெளியீடு!
இதில் குறிப்பாக சென்னை மண்டலத்தில் மட்டும் 750 மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக டெண்டர் கொடுக்கப்படாததால், பல்வேறு டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களின் உரிமங்கள் காலாவதியாகி உள்ளது. அதனால் டாஸ்மாக் பார்களுக்கான உரிமங்களை புதுப்பிக்க டெண்டர் விடப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்போது அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் உருவாக்கப்பட்டவுடன் விரைவில் டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.