தமிழகத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை டாஸ்மாக் கடைகள் அடைப்பு – முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை டாஸ்மாக் கடைகள் அடைப்பு – முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசுத்தொகை – புதுச்சேரி அரசு ஒப்புதல்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!