டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை அதிகரிப்பு? வெளியான தகவல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக வரிவசூல் குறைந்து அரசுக்கு வருவாய் கடுமையாக குறைந்து உள்ளது. இதனை சரிசெய்யும் நோக்கில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 50 ரூபாய் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மதுபானங்கள் விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதனால் தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் போதிலும், தொழில்துறைகள் முழுவீச்சில் இயங்க தொடங்கவில்லை. எனவே அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவாய் குறைந்துள்ளது. இதனால் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
டாஸ்மாக் கடை குடவுன்களில் தேங்கியுள்ள மதுபானங்களை விரைவில் விற்பனை செய்யுமாறு மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதால், பழைய ஸ்டாக்களை விற்றுத் தீர்க்குமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உயர்ரக மதுபானங்கள் ரூ.50, நடுத்தர ரகம் ரூ.30, குறைந்த ரக மதுபானம் ரூ.10 வரை விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கடந்த வருட ஊரடங்கின் பொழுதும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இம்முறை விலை அதிகரிப்புக்கான பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசு அனுமதி கிடைத்தவுடன் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.