தமிழகத்தில் தடையான தேர்வுகள்
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து தரப்பு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகி மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து கல்வி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் இதற்கிடையே தமிழகத்தில் நடக்க இருந்த பல்வேறு பணியிட தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள தேர்வுகளின் விவரங்களை கீழே தொகுத்துள்ளோம்,
TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள் ஒத்திவைப்பு – மேலும் தகவல்கள்
தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பதவியிடங்கள் முதன்மை எழுத்துத்தேர்வு வரும் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மேலும் தகவல்கள்
தமிழக கூட்டுறவு துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களின் கூட்டுறவு வங்கி மற்றும் சமூக துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது இந்த மாதத்தின் இறுதியில் நடத்தப்பட இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு 30.04.2020 அன்று வரை நடக்க இருந்த அனைத்துத் தேர்வுகளையும் தள்ளிவைப்பதாக அறிவித்து உள்ளது.
தமிழக பள்ளி பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா ? – மேலும் தகவல்கள்
கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை எனவும் மற்ற பொதுத்தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்