தமிழக மாணவர்களே இதனை செய்யாதீங்க – மீறினால் நடவடிக்கை.. டி.ஜி.பி முக்கிய உத்தரவு!
தமிழக கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி பல கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங் என்ற பெயரில் அத்து மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க தமிழக டி.ஜி.பி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ராகிங்:
தமிழக பள்ளி, கல்லூரிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை இரண்டாம் மற்றும் இறுதி ஆண்டு பயில கூடிய மாணவர்கள் ராகிங் எனும் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
Exams Daily Mobile App Download
சில நேரங்களில் ராகிங் என்ற பெயரில் அத்து மீறிய செயல்களிலும் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் அதிகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக டிஜிபி ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க என்று உத்தரவிட்டுள்ளார்.
NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கல்வி நிறுவனத்திலும் ராகிங் தடுப்புக் குழு, ராகிங் எதிர்ப்புப் படை, ராகிங் கண்காணிப்பு பிரிவு ஆகியவை இருக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களில் முக்கிய இடங்களில் CCTV கேமரா பொருத்த வேண்டும். சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.