தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் – அனைத்துக் கட்சி கூட்டம்!

0
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் - அனைத்துக் கட்சி கூட்டம்!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் - அனைத்துக் கட்சி கூட்டம்!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் – அனைத்துக் கட்சி கூட்டம்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்படுவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டத்தின் முடிவை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில், கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கவில்லை. இதனால் அப்போது இந்த 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூரில் இன்று ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா – பதற்றத்தில் கல்வித்துறை!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும், 6 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் செப்டம்பர் 6ம் தேதியான இன்று நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர். திமுக சார்பில் வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்தவேண்டும் எனவும், அதிமுக சார்பாக வாக்குப்பதிவு நேரத்தை சற்றுக் குறைக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் – இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் மற்ற கட்சிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக 9 மாவட்டங்களிலும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, தேர்தல் நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!