10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு

0
10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு
10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு

10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே கல்லூரி முதற்கொண்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொற்றின் தாக்கம் குறையாததினால் தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்படும், ரத்து செய்ய பட்டும் வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணி நடந்து கொண்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் வழங்கும் பணி 70 % முடிவடைந்து விட்டது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றவாறு தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அதன் விபரங்களை, அரசு பள்ளிகள், 100 சதவீதமும், தனியார் பள்ளிகள், 75 சதவீதமும் எங்களுக்கு ஒப்படைத்து உள்ளன. பத்தாம் வகுப்பினருக்கு, மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சான்றிதழில் பாட வாரியாக, மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு முடிவுகளை, ஜூன் 22ல் அரசிடம் ஒப்படைப்பர். இதன் பின் அவை நடைமுறைக்கு வரும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!