10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை – கணக்கீட்டு முறை

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை
10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை

10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை – கணக்கீட்டு முறை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு நடத்தப்படாததினால் மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதம் ஆனது எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த குழப்பமும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதற்கு வேறு ஒரு வழிமுறையினை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதாவது 10ம் வகுப்பு மனானவர்களுக்கு அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

தற்போது அது குறித்து ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் கூடுதல் 37 ஆக இருக்க வேண்டும். வருகை பதிவேடு 100 % ஆக இருந்தாலும் 37 மதிப்பெண்கள் வரை இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இது குறித்த தகவல் குறிப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் மதிப்பிடப்படும்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!