10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் குளறுபடியா ! – விசாரிக்க கல்வி ஆணையம் உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலினால் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்பைடயிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அனைவரும் தேர்ச்சி என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தாலும் தேர்வுத்துறை சார்பில் கூறப்பட்டிருந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
இந்த குழப்பம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவர் சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எப்படி பள்ளிக்கு வராத இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி? என்பது குறித்தும் விசாரிக்க பள்ளி கல்வி துறை ஆணையர் சிபி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழப்பத்திற்கு விரைவில் சரியான காரணத்தினை கண்டறியப்பட்டதன் பின்னர் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா நெனப்பித்தனை பொருத்திருந்து பார்க்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |