தமிழக சுகாதாரத் துறையில் ரூ.62,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அனைத்து துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக சுகாதார துறை சார்பில் காலியாக உள்ள 39 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சற்று ஓய்ந்து வருவதால் தள்ளி வைக்கப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. இதனால் கொரோனா காலகட்டத்தில் வேலையின்மையால் அவதி பட்டவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிக பயன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது தமிழக சுகாதார துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு – இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!
இந்த பணிக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணியின் பெயர் VILLAGE HEALTH NURSE /AUXILIARY NURSE MIDWIFE ஆகும். இந்த பணியில் 39 காலியிடங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இப்பணிக்கான மாத சம்பளம் ரூ.19,500 – 62,000 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏஎன்எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 59 க்குள் இருக்க வேண்டும்.
இந்த வகையில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் பத்தாம் வகுப்புக்கு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வகையில் விண்ணப்பக் கட்டணம் ரூ.300 யை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022. மேலும் இந்த பணிக்கான கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.