தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 2.5 லட்சம் வரை ஊதியம்!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இப்பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தில் தற்போது அசோசியேட் பிரிவில் விபி- கேரியர் போர்டல், ஏவிபி-இன்டஸ்ட்ரி எங்கேஜ்மெண்ட் (எம்இஏசி), ஏவிபி – எச்ஆர் மற்றும் ட்ரெய்னிங், சீனியர் அசோசியேட்ஸ், சீனியர் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு MSC, MBA, B.E, B.TECH உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி தகுதி உடையவர்கள் nskill.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக ஜன 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் 50,000 முதல் அதிகபட்சம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும். ஊதியமானது பதவிகளை பொறுத்து மாறுபடும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.