தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஐஏஎஸ் தீரஜ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் தாக்கத்துக்கு ஆளாகின்றனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமாக பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் தாக்கத்தினால் தினமும் 16 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தினால் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தாக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு!!
முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் முதல் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். கல்வித்துறை பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.