தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தலைமை செயலர் கடிதம்!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தலைமை செயலர் கடிதம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தலைமை செயலர் கடிதம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தலைமை செயலர் கடிதம்!

கொரோனா எதிரொலியாக கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. மேலும் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தாக்கம் குறைய தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது. இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளனர். இந்நிலையில் பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இறையன்பு கடிதம்:

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 20-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 27-ம் தேதி முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் “ஒரு வாரம் முழுவதும் துாய்மை பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும்’ என, தலைமை செயலர் இறையன்பு கூறியுள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறப்பு – களைகட்டும் வியாபாரம்!

அதில் கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளும், மாணவர்களை வரவேற்க, துாய்மை துலங்கும் இடமாக இருக்க வேண்டும். துாய்மை பள்ளிகள் இயக்கம் என்ற முயற்சியை மேற்கொண்டு, பள்ளியை அழகு மிகுந்த இடமாக மாற்ற வேண்டும். துாய்மையான இடத்தில் பயிலும் ஆர்வமும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளியை சொந்த இல்லம் போல பாவித்து பராமரிக்கும் ஆசிரியர்களுக்கு, மாவட்டம் தோறும் பரிசுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கழிப்பறைகளின் கதவுகளை சரிசெய்தும், செம்மைப்படுத்துவதும் முக்கியம்; துர்நாற்றம் வீசாமல் துாய்மையுடன் இருக்கும்படி செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து விளையாட்டு திடலின் பள்ளங்களை சமப்படுத்தி, மாணவர்கள் துள்ளி விளையாடும் இடமாக மாற்ற வேண்டும். குடிநீர் பாதுகாக்கப்படும் கலன்களை தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெற்று, பள்ளிகளில் இன்னும் சில அத்தியாவசிய பணிகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். இதையடுத்து சத்துணவு சமைக்கும் கூடத்தை வெள்ளை அடித்து, அடுப்புகளை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!