தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

0
தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பல மாதங்களுக்கு பின்னர் நாளை (செப்.1) முதல் திறக்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பல மாதங்களாக மாணவர்கள் வீடுகளில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது எனவே பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் ஆலோசனை கேட்டு அரசு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் 3ஆவது அலை தொடங்கி விட்டதா ? – அதிர்ச்சி தகவல்!

அதன் படி, நாளை முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தலைமை ஆசிரியர் கண்காணிப்பிலும், மாவட்ட சி.இ.ஓ. கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், ஒரு வேளை அவர்கள் முகக்கவசம் அணிய மறந்தாலோ, அல்லது முகக்கவசத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு கொடுப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கூடுதல் முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும். அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகள் மீது தனி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்

மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளிகளில் குழந்தைகள் வருவதற்கு முன்னதாக வகுப்பறையில் உள்ள இருக்கைகள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு வகுப்பறைகளுக்கும் தனித்தனியாக சானிட்டரைசர்கள் வைத்திருக்க வேண்டும், கழிவறைகளில் சானிட்டரைசர்கள் வைத்திருக்க வேண்டும், வகுப்பறைகளில் முகக்கவசம் வைத்திருக்க வேண்டும், வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும், தொடக்கத்திலேயே பாடங்களை நடத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் . மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 95% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே மாணவர்கள் அச்சம் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!