தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டு உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து நாளை மறுநாள் (செப்.8) முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேசுகையில், பள்ளிகளில் முதல் 8 நாட்களுக்கான வகுப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மாணவர்களின் வருகை பதிவேடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
கோவை பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பு – 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!
கிராமப்புற மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. காலியாக உள்ள தூய்மை பணியாளர்களுக்கான இடங்களில் விரைவில் பணியமர்த்தல் செய்யப்படும். மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தாலும் தண்டனை அளிக்க கூடாது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும் நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.
செப்.13 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது கண்டிப்பாக உறுதி செய்யப்படும். இதனையடுத்து தொடக்க பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து செப்.8ம் தேதிக்கு பின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார். நடப்பு கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது வழங்கியதில் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இம்முறை முதல்வரின் புகைப்படம் இன்றி நல்லாசிரியர் விருது சான்றிதழ் வழங்கப்பட்டது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.