தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? டிச.25 இல் ஆலோசனை! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடர்ந்து செயல்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ஓமைக்ரான் அச்சுறுத்தல்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன்கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!
இவ்வாறாக பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் – சேவைகள் பாதிக்கும் அபாயம்!
இந்நிலையில் மாணவர்களின் கற்றல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி வரும் ஜன.3ம் தேதி முதல் வகுப்புகள் இயங்கும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் நுழைந்துள்ள ஓமைக்ரான் தொற்று தீவிரமடையும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. அதனால் ஓமைக்ரான் அச்சுறுத்தல் தீவிரமாவதால் பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் டிச.25ம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.