தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? மாணவ, மாணவிகளுக்கு பரவும் கொரோனா!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் அடுத்தகட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதனால் அரசு சார்பில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. எனவே மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வியில் நாட்டம் இல்லாத காரணத்தால் விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரப்பட்டது. மறுபுறம் கொரோனா வழிகாட்டுதல்கள், தடுப்பூசி செலுத்துதல் நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!
எனவே அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பேறுகால விடுப்பு அரசாணை விளக்கம்!
நேற்று ஒரே பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் பதற்றம் நிலவியது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. எனவே தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளது.