தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு? அறிக்கை தகவல்!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு? அறிக்கை தகவல்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு? அறிக்கை தகவல்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு? அறிக்கை தகவல்!

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்தவுடன் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கிய 2 வாரங்களுக்குள்ளாக பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளிகளை மூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடல்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்து வந்த மாணவர்களது கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2 ஆம் அலை தொற்று வீதம் வெகுவாக குறைந்துள்ளதால், பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

Airtel & Jio நிறுவனங்களின் 3GB டேட்டா, Disney + Hotstar இலவசம் – சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!

இந்த செயல்பாடுகளின் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட்ட இரு தினங்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களுக்குளாக சுமார் 83 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கோவை மாநகரில் மட்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நோய் தாக்கம் உச்சமடையும் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கொரோனா 3 ஆம் அலை, தடுப்பூசி போடாதவர்களை அதிகளவு தாக்கக்கூடும் என கணித்துள்ளதால், இதில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தாக்கப்படுவார்கள் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இருந்தாலும் கொரோனா 2 ஆம் அலையை விட, அதன் 3 ஆம் அலை தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என வெளியாகும் செய்திகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொஞ்சமேனும் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் – முன்பதிவு செய்வது எப்படி?

ஆனால் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படாததால் ஆரம்பப் பள்ளிகளை திறப்பது கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் பள்ளி மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கவனத்தில் கொண்டு வரும் நாட்களில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!