தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -ரூ. 109 கோடி நிதி வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது ரூபாய் 109 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சம்பளம்:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிகழ்வில் தொய்வு ஏற்படுகிறது. தற்போது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தகுதித்தேர்வின் மூலமாக மட்டுமே நிரப்பப்படுவதால் தேர்வுகளை நடத்தி தகுதியான ஆசிரியர்களின் நியமிக்க காலதாமதம் ஆகிறது.
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய சூழலில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தற்கால ஆசிரியர்களுக்கு அரசு ஒப்பந்த அடிப்படையில் மாதந்தோறும் ஊதியத்தை வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – அரசாணை வெளியீடு!
அண்மையில் பள்ளிக்கல்வித்துறை 400-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ரூ.109 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.