தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்னர் பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை விடுமுறை:
தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8 முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து 6 நாட்கள் (சனிக்கிழமை உட்பட) செயல்பட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
இதனால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாக புகார்கள் வந்தன. மேலும் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர்கள் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் ஆசிரியர்களின் பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.
எனவே பள்ளிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், சனிக்கிழமை விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்