தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும்? அமைச்சர் விளக்கம்!
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2 ஆம் பேரலை காரணமாக கடந்த 2 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. முறையான கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றி, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதன் அடிப்படையில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது.
தினசரி ரூ.3,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அதே போல தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்திலும் பள்ளிகளை மீண்டுமாக துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டுமாக திறப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tokyo Olympics போட்டி – வில்வித்தையில் 2 முறை தங்கம் வென்றவரை வீழ்த்திய இந்தியர்!
எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அனைத்து 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.