தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து? மாணவர்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து? மாணவர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து? மாணவர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து? மாணவர்கள் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை பிப்ரவரி மாதத்தில் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் பள்ளிகளை திறப்பது குறித்த முக்கிய கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது.

அத்துடன் இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. தமிழகத்திலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. அதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு ம்,மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் ஜனவரி 31ம் தேதி அன்று முடிவுக்கு வருகிறது. அதனால் தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தமிழகத்தில் இரவு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? முதல்வர் ஆலோசனை! அரசின் முடிவு என்ன?

இந்த ஆலோசனையின் முடிவில் தற்போது தொற்று பரவல் குறைந்து கொண்டு வருவதால் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி அன்று திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பரிந்துரைத்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்டால் பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்துடன் முதல் திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் பள்ளிகளை பிப்ரவரி மாதத்தில் திறப்பதை ரத்து செய்து இன்னும் சிறிது நாட்களுக்கு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!